டெங்கு காய்ச்சல் உள்பட மர்ம காய்ச்சலைக் கட்டுப்படுத்த சென்னை அம்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாம் மூலம் 550 பேர் பலன் அடைந்தனர்.
இந்த முகாமுக்கு தமிழ் மருத்துவக் கழகத்தின் அவிழ்தம் சித்த மருத்துவமனையும் மனித நேயம் அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. முகாமில் பங்கேற்றோருக்கு காய்ச்சலுக்கு உரிய நாடி பரிசோதனை செய்யப்பட்டு, நிலவேம்புக் குடிநீர் கஷாயம் அளிக்கப்பட்டது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஒரு வாரத்துக்கு உரிய நிலவேம்புக் குடிநீர் (தூள்) உள்ளிட்ட சித்த மருந்துகள் இலவசமாக அளிக்கப்பட்டன என்றார் தமிழ் மருத்துவக் கழகத்தின் செயலர் மருத்துவர் செந்தில் கருணாகரன். இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் வி.விஜயகுமார், சென்னை மாமன்ற உறுப்பினர் (வார்டு 81) குமாரி ஹரிகிருஷ்ணன், மனித நேயம் அறக்கட்டளையின் நிறுவனர் ஆடானை சுகுமார், நிர்வாக அறங்காவலர் செல்வகுமார், மோகன் ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment